உலக யோகா தினம்
தேகத்தை பேணிட
யோகத்தை பயிலுவோம்
ரோகத்தை தடுத்திட
யோகத்தை பயிலுவோம்
சிவனார் நமக்களித்த
சூக்ஷ்ம யோகத்தை
சிந்தையிலே இருத்தி
செம்மையாய் வாழ்வோம்
பதஞ்சலி வகுத்து தந்த
பயிற்சி முறைகளையும்
முறையாக செய்து வரின்
முக்காலும் நலம் பெறலாம்
மூச்சுப் பயிற்சியினை
முனைப்போடு செய்திடவே
மூச்சடங்கும் வேளையினை
மும்மடங்கு உயர்த்திடலாம்
ஆசனம் போடுவதால் நம்
ஆயுளும் நீடிக்கும் கூடவே
பிராணாயாமம் செய்து வர
பிராணன் நம் வசமிருக்கும்
கல்விச் சாலையிலே
கட்டாயமாய் யோகத்தை
கற்பிக்கச் செய்வதனால்
கவனத்தை ஈர்த்திடலாம்
மதத்தின் பெயர் கொண்டு
முட்டாளாய் எதிர்க்காமல்
யோகக் கல்வியினை நாம்
எல்லோரும் பயில வேணும்
மன அழுத்தம் நீங்கிட
தியானத்தில் அமரலாம்
அமைதியான வாழ்விற்கு
ஆசனப் பயிற்சி கொள்ளலாம்
சித்தர்களும் முனிவர்களும்
யோகியர்கள் பேணித் தந்த
பண்டைய பயிற்சியினை
பணிவோடு கற்றிடுவோம்
கலாச்சார சீரழிவில்
காலத்தை ஒழிக்காமல்
உடலுக்கு உரமளிக்கும்
உயர் கலையை கற்றிடுவோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
💐💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.06.18
No comments:
Post a Comment