பகுத்தறிவு
கடவுள் இல்லையென
காலத்திற்கும் கூவியவர்
கால பயம் வந்தவுடன்
கோவிலுக்கு போவதென்ன
பகுத்தறிவு பாசறையில்
பல்லாண்டு உட்கார்ந்து
பிதற்றி வந்த நேரத்திலே
கோவிலுக்கு போவதென்ன
ஆட்சியை கைப்பிடிக்க
அட்டூழியம் செய்தவர்கள்
அரங்கனை தரிசிக்க இன்று
கோவிலுக்கு போவதென்ன
பெரியாரின் பிள்ளைகளாய்
பொய்யுரைத்து திரிந்தவர்கள்
போகுமிடம் அறியாது இன்று
கோவிலுக்கு போவதென்ன
நாத்திக கதைகள் பேசியே
நாற்காலியைப் பிடித்தவர்கள்
நல்ல மனிதர்கள் போல இன்று
கோவிலுக்கு போவதென்ன
பார்ப்பன த்வேஷத்தில்
பல்லாண்டு கழித்தவர்கள்
அந்தணர்களின் ஆசி பெற
கோவிலுக்கு போவதென்ன
இந்து தர்மத்தை இவர்கள்
இழித்து தள்ளி வந்து அதே
இறைவனை வழிபடவே
கோவிலுக்கு போவதென்ன
சனாதன தர்மத்தை தொடர்ந்து
சறுக்க எண்ணி தோற்றவர்கள்
சலித்து சரணாகதி அடைந்து
கோவிலுக்கு போவதென்ன
அம்மணிகள் மூலம் இதுவரை
ஆண்டவனை தொழுதவர்கள்
ஆட்டம் முடியும் நேரம் தானாய்
கோவிலுக்கு போவதென்ன
பூரணகும்ப மரியாதை
பொட்டிட்டு நெற்றியிலே
பூ மாலை கழுத்துடனே
பகுத்தறிவு வீழ்ந்ததய்யா..
நினைத்தேன் எழுதுகிறேன்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.06.18
No comments:
Post a Comment