Search This Blog

Friday, June 22, 2018

பகுத்தறிவு

பகுத்தறிவு

கடவுள் இல்லையென
காலத்திற்கும் கூவியவர்
கால பயம் வந்தவுடன்
கோவிலுக்கு போவதென்ன

பகுத்தறிவு பாசறையில்
பல்லாண்டு உட்கார்ந்து
பிதற்றி வந்த நேரத்திலே
கோவிலுக்கு போவதென்ன

ஆட்சியை கைப்பிடிக்க
அட்டூழியம் செய்தவர்கள்
அரங்கனை தரிசிக்க இன்று
கோவிலுக்கு போவதென்ன

பெரியாரின் பிள்ளைகளாய்
பொய்யுரைத்து திரிந்தவர்கள்
போகுமிடம் அறியாது இன்று
கோவிலுக்கு போவதென்ன

நாத்திக கதைகள் பேசியே
நாற்காலியைப் பிடித்தவர்கள்
நல்ல மனிதர்கள் போல இன்று
கோவிலுக்கு போவதென்ன

பார்ப்பன த்வேஷத்தில்
பல்லாண்டு கழித்தவர்கள்
அந்தணர்களின் ஆசி பெற
கோவிலுக்கு போவதென்ன

இந்து தர்மத்தை இவர்கள்
இழித்து தள்ளி வந்து அதே
இறைவனை வழிபடவே
கோவிலுக்கு போவதென்ன

சனாதன தர்மத்தை தொடர்ந்து
சறுக்க எண்ணி தோற்றவர்கள்
சலித்து சரணாகதி அடைந்து
கோவிலுக்கு போவதென்ன

அம்மணிகள் மூலம் இதுவரை
ஆண்டவனை தொழுதவர்கள்
ஆட்டம் முடியும் நேரம் தானாய்
கோவிலுக்கு போவதென்ன

பூரணகும்ப மரியாதை
பொட்டிட்டு நெற்றியிலே
பூ மாலை கழுத்துடனே
பகுத்தறிவு வீழ்ந்ததய்யா..

நினைத்தேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...