Search This Blog

Friday, June 22, 2018

உண்மையாய் இரு

உண்மையாய் இரு

கை வலிக்க நித்தம்
கைப்பேசி குடைந்து
குறுஞ்செய்தி தட்டி
குதூகலம் அடைவோர்
வாட்ஸப் அரட்டையில்
வீணாகத் திரிவோர்
முகநூல் மோகத்தில்
முப்போதும் தொலைவோர்
எண்ணிக்கை பெருகுவது
வேதனையாய் இருக்குது
நல்லதும் கெட்டதும்
உண்மையும் பொய்யும்
ஒன்றையும் உணராது
வந்த மாத்திரத்தில்
வகையிலாது பகிர்வது
வேடிக்கையான செயல்
வருந்தத்தக்க செயல்
ஒன்றை பத்தாக்கி
புரளியிட்டு புரட்சியூட்டும்
பொய்யர்கள் மத்தியில்
கவனமுடன் இருக்கவும்
உதவி செய்யாவிடினும்
உபத்திரவமாய் இல்லாது
ஊருக்கு ஒத்துழைப்பாய்
உண்மையாய் வாழ்ந்திடுவோம்.

நினைத்தேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.06.16

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...