உண்மையாய் இரு
கை வலிக்க நித்தம்
கைப்பேசி குடைந்து
குறுஞ்செய்தி தட்டி
குதூகலம் அடைவோர்
வாட்ஸப் அரட்டையில்
வீணாகத் திரிவோர்
முகநூல் மோகத்தில்
முப்போதும் தொலைவோர்
எண்ணிக்கை பெருகுவது
வேதனையாய் இருக்குது
நல்லதும் கெட்டதும்
உண்மையும் பொய்யும்
ஒன்றையும் உணராது
வந்த மாத்திரத்தில்
வகையிலாது பகிர்வது
வேடிக்கையான செயல்
வருந்தத்தக்க செயல்
ஒன்றை பத்தாக்கி
புரளியிட்டு புரட்சியூட்டும்
பொய்யர்கள் மத்தியில்
கவனமுடன் இருக்கவும்
உதவி செய்யாவிடினும்
உபத்திரவமாய் இல்லாது
ஊருக்கு ஒத்துழைப்பாய்
உண்மையாய் வாழ்ந்திடுவோம்.
நினைத்தேன் எழுதுகிறேன்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.06.16
No comments:
Post a Comment