வாழ்க இந்து மதம்
ஆண்டின் ஆரம்பத்தில்
ஆதிசங்கரர் வழிவந்த
அத்வைத மூர்த்தியாம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளை இழந்தோம்.
இன்றைய தினத்தில்
இராமானுஜர் வழிவந்த
வைணவ ஆச்சாரிய மகான்
ஸ்ரீ ரங்க ஜீயர் ஸ்வாமிகளை
இழந்து நிற்கின்றோம்..
இந்து மதம் என்பது
சைவம் வைணவம்
இரண்டும் கலந்த
சனாதன தர்மமாகும்..
சமயப் பெரியோர்கள்
சமாதி அடைவதென்பது
சற்றே மனக்கலக்கத்தை
உண்டாக்குகிறது..
மதத்தின் பெயரால் தினம்
மாநாடு போட்டு மக்களை
திசைதிருப்ப நினைக்கும்
திராவிட ஓநாய்கள் அதிகம்..
ஒற்றுமை குலையாமல்
ஒன்றாய்க் கூடி நின்று
சமய நல்லிணக்கம் பேண
சத்தியம் எடுப்போம்..
பெரியோர் சொல் கேட்டு
பக்தி நெறி வாழ்வோம்
பெரியார் வழி வந்தோரின்
பேச்சைப் புறந்தள்ளுவோம்..
இந்து மதம் வாழ்கவென
இடியாய் முழங்கிடுவோம்
சோதனை பல வந்தாலும்
சோர்ந்து விட மாட்டோம்..
வைகுண்ட ப்ராப்தியடைந்த
ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள் பாதம்
பணிந்து ஆன்மா சாந்தியடைய
ஸ்ரீ ரங்கநாதரைத் துதிப்போம்..
நாராயண நாராயண
ஓம் சாந்தி ஓம் சாந்தி
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.07.2018
No comments:
Post a Comment