Search This Blog

Wednesday, July 11, 2018

வாழ்க இந்து மதம்

வாழ்க இந்து மதம்

ஆண்டின் ஆரம்பத்தில்
ஆதிசங்கரர்  வழிவந்த
அத்வைத மூர்த்தியாம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளை இழந்தோம்.

இன்றைய தினத்தில்
இராமானுஜர் வழிவந்த
வைணவ ஆச்சாரிய மகான்
ஸ்ரீ ரங்க ஜீயர் ஸ்வாமிகளை
இழந்து நிற்கின்றோம்..

இந்து மதம் என்பது
சைவம் வைணவம்
இரண்டும் கலந்த
சனாதன தர்மமாகும்..

சமயப் பெரியோர்கள்
சமாதி அடைவதென்பது
சற்றே மனக்கலக்கத்தை
உண்டாக்குகிறது..

மதத்தின் பெயரால் தினம்
மாநாடு போட்டு மக்களை
திசைதிருப்ப நினைக்கும்
திராவிட ஓநாய்கள் அதிகம்..

ஒற்றுமை குலையாமல்
ஒன்றாய்க் கூடி நின்று
சமய நல்லிணக்கம் பேண
சத்தியம் எடுப்போம்..

பெரியோர் சொல் கேட்டு
பக்தி நெறி வாழ்வோம்
பெரியார் வழி வந்தோரின்
பேச்சைப் புறந்தள்ளுவோம்..

இந்து மதம் வாழ்கவென
இடியாய் முழங்கிடுவோம்
சோதனை பல வந்தாலும்
சோர்ந்து விட மாட்டோம்..

வைகுண்ட ப்ராப்தியடைந்த
ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள் பாதம்
பணிந்து ஆன்மா சாந்தியடைய
ஸ்ரீ ரங்கநாதரைத் துதிப்போம்..

நாராயண நாராயண

ஓம் சாந்தி ஓம் சாந்தி

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.07.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...