Search This Blog

Thursday, July 12, 2018

பித்ருக்கள்

பித்ருக்கள்

வயது ஏற ஏற நம்மை
வளர்த்த பெரியோர்கள்
விண்ணுலகம் செல்வது
வருத்தமான விஷயமாம்
வந்தோர்கள் வேலை முடிந்து
வானேகுவது வாடிக்கையாம்
எதையும் தீர்மானிப்பது
நம் கையில் இல்லையாம்
வளர்ந்த போது நமக்கு
அன்னமிட்ட பெற்றவர்க்கு
வயோதிகத்தில் அமுதூட்டி
சீராட்டி வைத்தோமானால்
ஆலயம் செல்ல வேண்டாம்
ஆராதித்து உருக வேண்டாம்
நெஞ்சில் சுமந்தவரை
நெருப்புக்கு இரையாக்கி
நம் கடமை/கர்மா செய்வதே
நாம் செய்யும் செயலாகும்
அமாவாசை நாளன்று
எள்ளும் தண்ணீரும் விட்டு
ஆண்டிற்கு ஒருமுறையே
அண்ணன் தம்பிகளோடு
அனுசரணையாய் திதியிட்டு
பித்ருக்களை பூசித்து வர
ஆசி தந்து வாழ்த்திடுவர்
ஆண்டவனாய் காத்திடுவர்.

ஓம் சாந்தி  ஓம் சாந்தி !!!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...