பித்ருக்கள்
வயது ஏற ஏற நம்மை
வளர்த்த பெரியோர்கள்
விண்ணுலகம் செல்வது
வருத்தமான விஷயமாம்
வந்தோர்கள் வேலை முடிந்து
வானேகுவது வாடிக்கையாம்
எதையும் தீர்மானிப்பது
நம் கையில் இல்லையாம்
வளர்ந்த போது நமக்கு
அன்னமிட்ட பெற்றவர்க்கு
வயோதிகத்தில் அமுதூட்டி
சீராட்டி வைத்தோமானால்
ஆலயம் செல்ல வேண்டாம்
ஆராதித்து உருக வேண்டாம்
நெஞ்சில் சுமந்தவரை
நெருப்புக்கு இரையாக்கி
நம் கடமை/கர்மா செய்வதே
நாம் செய்யும் செயலாகும்
அமாவாசை நாளன்று
எள்ளும் தண்ணீரும் விட்டு
ஆண்டிற்கு ஒருமுறையே
அண்ணன் தம்பிகளோடு
அனுசரணையாய் திதியிட்டு
பித்ருக்களை பூசித்து வர
ஆசி தந்து வாழ்த்திடுவர்
ஆண்டவனாய் காத்திடுவர்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி !!!!
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.07.18
No comments:
Post a Comment