Search This Blog

Friday, July 13, 2018

இரயில் பயணம்

இரயில் பயணம்

முதன்முறையாக
நீண்டதொரு பயணம்
புகைவண்டியில் போகும்
புனித பயணம்..

வார இறுதியிலே
வசதியாய் புறப்பட்டு
வண்டியில் செல்லும்
உற்சாகப் பயணம்..

மூன்று நாள் பயணத்திற்கு
முன்பதிவு செய்து கொண்டு
மகிழ்ச்சியோடு துவங்கிய
முன்னேற்பாடான பயணம்..

மனைவி குழந்தைகளுடன்
மாமனார் மாமியார் கூடவே
சகலை கொழுந்தியார்கள்
சேர்ந்த குஷியான பயணம்..

நொறுக்கு தீனிகள் தின்ன
நிறையவே உண்டு, கூடவே
நெஞ்சத்தை நிறைத்திடும்
நினைவுகளும் உண்டு..

அரட்டையடித்து கொண்டு
ஆனந்தமாய் பயணித்து
ராத்திரி நேரத்தை ஜாலியாய்
ரயிலிலே கழித்தோம்..

குளிரூட்டிய பெட்டியில்
குழந்தைகள் குதூகளிக்க
கும்மாளமிட்டபடி சென்ற
களிப்பானதொரு பயணம்..

இரயில் பயணத்தில்
இராமேஸ்வரம் சென்று
இராமநாத ஸ்வாமியை
தரிசிக்கும் பயணம்..

இந்த நாளைப் போல
எந்த நாளும் அமைய
இறைவனை வேண்டி
என்றும் பணிகின்றேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...