இராமேஸ்வர யாத்திரை
தங்கச்சி மடம், அக்காள் மடம்
சேதுக்கரை, தேவிப்பட்டினம், திருஉத்திரகோசமங்கை
திருப்புல்லாணி, தனுஷ்கோடி
வெறுமனே வரலாற்றில்
படித்த ஊர்களையெல்லாம்
நேரில் பார்க்கும் நல்வாய்ப்பு
கிட்டியது.
அக்னி தீர்த்த சமுத்திரத்தில்
அகமகிழ நீராடி, இருபத்தோறு
கிணறுகளில் புனித நந்நீராடி
கோவிலுக்குள்ளே சென்றோம்.
இராமருக்கு அருளிய
இராமநாதஸ்வாமியை
பர்வதவர்த்தினியுடன்
பக்தியோடு வழிபட்டோம்.
மங்களாம்பிகை சமேத
மங்களநாதரை கண்டு
மரகத நடராஜரையும்
மனமுருக தொழுதோம்.
நவபாஷாணத்தால் ஆன
நவக்கிரகங்களை நாங்கள்
கடலுக்கு நடுவினிலே
கண்குளிர தரிசித்தோம்.
இருகடல் சங்கமிக்கும்
தனுஷ்கோடியில் நீராடி
எங்கள் பாவங்களை
எல்லாம் தீர்த்தோம்.
இறுதியில் பேய்கரும்பில்
இருக்கும் ஐயா அப்துல்கலாம்
நினைவிடத்தையும் தரிசித்து
யாத்திரை நிறைவு செய்தோம்.
உறவினர்கள் ஒன்றுகூடி
உளமகிழ்ந்து அளவலாவ
இது பெரியோர்கள் காட்டிய
புண்ணிய வழியாகும்.
தீர்த்த யாத்திரையென்பது
மூத்தவர்களுக்கு மட்டுமல்ல
இளைய வயதினரும் சேர்ந்து
இறையுணர்வோடு இணையவே.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.07.2018
No comments:
Post a Comment