Search This Blog

Tuesday, July 17, 2018

ஆடி மாதம்

ஆடி மாதம்

ஆதியும் அந்தமுமில்லா
அகிலாண்டேஸ்வரியை
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

அகிலத்தை ஆட்டுவிக்கும்
அன்னை ஆதிபராசக்தியை
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

பக்தி சிரத்தையோடு
பார்வதியைப் பணிய
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

ஆடி வெள்ளி கிழமையிலே
அம்பிகையை வணங்கிட
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

ஆடி கிருத்திகையில்
அம்மனைத் துதித்திட
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

பதினெட்டாம் பெருக்கில்
பாவம் தீர காவிரி நீராடி
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

அஷ்டலக்ஷ்மி அருள் பெற
வரலக்ஷ்மி விரதம் இருக்க
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

தக்ஷிணாயனம் தொடங்கும்
ஆடியில் பித்ரு பூஜை செய
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

ஆடி அமாவாசை நாளில்
அர்க்யம் விட்டு பூசிக்கவே
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

ஆடி மாத சிறப்பினை
அடியெடுத்து எழுதிடும்
அடியேனது முயற்சிக்கு
ஆசியிட கோருகிறேன்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.07.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...