ஆடி மாதம்
ஆதியும் அந்தமுமில்லா
அகிலாண்டேஸ்வரியை
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.
அகிலத்தை ஆட்டுவிக்கும்
அன்னை ஆதிபராசக்தியை
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.
பக்தி சிரத்தையோடு
பார்வதியைப் பணிய
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.
ஆடி வெள்ளி கிழமையிலே
அம்பிகையை வணங்கிட
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.
ஆடி கிருத்திகையில்
அம்மனைத் துதித்திட
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.
பதினெட்டாம் பெருக்கில்
பாவம் தீர காவிரி நீராடி
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.
அஷ்டலக்ஷ்மி அருள் பெற
வரலக்ஷ்மி விரதம் இருக்க
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.
தக்ஷிணாயனம் தொடங்கும்
ஆடியில் பித்ரு பூஜை செய
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.
ஆடி அமாவாசை நாளில்
அர்க்யம் விட்டு பூசிக்கவே
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.
ஆடி மாத சிறப்பினை
அடியெடுத்து எழுதிடும்
அடியேனது முயற்சிக்கு
ஆசியிட கோருகிறேன்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.07.2018
No comments:
Post a Comment