ஆடிச் சிறப்பு
தெய்வீக மாதமாம்
இந்த ஆடி மாதத்தில்
தள்ள(ஆடி) வராமல்
தெளிவாக வீடு வந்து
சேருமாறு தாழ்மையுடன்
வேண்டிக் கொள்கின்றேன்.
ஆடித் தள்ளுபடியின்
சலுகையில் ஏமார்ந்து
சேர்த்த பணத்தினை
செலவு பண்ணிடாமல்
எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டிக் கொள்கின்றேன்.
மனைவியைப் பிரிந்த
புது மாப்பிள்ளைகள்
அலைந்து திரியாமல்
அடக்க ஒடுக்கமாக
இருக்கும்படியாய் நான்
வேண்டிக் கொள்கின்றேன்.
அம்பாள் அனுக்கிரகம் பெற
அஷ்ட ஐஸ்வர்யம் பெற்றிட
உள்ளத்தை தூய்மையாக்கி
இல்லத்தையும் சுத்தமாக்கி
பக்தியுடன் பூசிக்குமாறு
வேண்டிக் கொள்கின்றேன்.
ஆடி அமாவாசையில்
பித்ருக்களை மகிழ்வித்து
ஏழைக்கு மனமிரங்கி
இயன்றளவு அன்னமிட்டு
தர்மநெறியில் இருந்திட
வேண்டிக் கொள்கின்றேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.07.2018
No comments:
Post a Comment