Search This Blog

Sunday, July 22, 2018

ஒன்று படுவோம்

ஒன்று படுவோம்

இன்னும் எத்தனை
காலம் தான் எங்கள்
மதத்தின் மீது நீங்கள்
கல்லெறிவீர்கள் ???

திருப்பியடிக்க எமக்கு
தைரியம் இல்லையென
நினைத்தீரா அல்லது
தெம்பில்லை நினைத்தீரா.

இந்துவாக பிறந்து
இந்நாட்டில் வாழ்ந்து
இருக்கின்ற வீட்டிற்குள்
கலகத்தை விளைப்பதேன் ?

தன் தாயினைப் பழித்து
வாடகைத் தாயிடம் போய்
தஞ்சமடைவது போன்றது
தங்கள் ஈனச் செயல்..

மல்லாந்து துப்பும் எச்சில் தம்
மார்பில் தான் விழுமென்கிற
சாமானிய அறிவு கூட இந்த
சனியன்களுக்கு புரிவதில்லை.

இந்து கடவுள்களை மட்டும்
இழித்து பேசி வரும் இவர்க்கு
இதர மதத்து தெய்வங்களை
எதிர்த்து பேச தைரியமில்லை.

மதத்தை மாற்றி விட்டு
பெயரளவில் இந்துவாக
பொய்யர்கள் உலவுவது
வேதனையாய் உள்ளது.

வைரமுத்து பாரதிராஜா
சைமன் க மல ஹாசன்
இன்னும் எத்தனை பேர்
இந்நாட்டில் இறைவா !!!

பெரும்பான்மையாயிருந்தும்
பாரத தேசத்தில் இன்னும்
இந்துக்களை மட்டும் இவர்கள்
வம்புக்கு இழுப்பதேனோ.

மதச்சார்பின்மை நாட்டில்
எம்மதமும் சம்மதம் எனில்
எம் மதத்தையும் கடவுளையும்
தொடர்ந்து விமர்சிப்பதேனோ.

சாமி இல்லையென்று நித்தம்
சத்தம் போட்டு கூறுவோரும்
நோன்பு கஞ்சி குடிக்க மட்டும்
முனைந்து கிடப்பதேனோ.

அந்தணர் சாதியை
வம்புக்கு இழுத்து
அற்பத்தனமாய்
மகிழ்வது ஏனோ..

தனி மனித நம்பிக்கையில்
தலையிட  உரிமையில்லை
நாத்திக நாய்களுக்கு இது
ஒருபோதும் புரிவதில்லை.

காசு வாங்கி கூவுகின்ற
ஊடக வேஷதாரிகளும்
அடிப்படை உண்மையை
சரியாக உணர வேண்டும்.

தாய் மதத்தைப் பற்றி
தரம் குறைத்து பேசுவது
தன்னைப் பெற்ற தாயை
பேசுவது போலாகும்.

நம் மதத்திற்கு ஆதரவாய்
குரல் கொடுப்போரை
மதவாதி என்ற பெயரில்
முடக்குவது ஏனோ.

சண்டை சச்சரவின்றி
சாந்தமாய் வாழ்ந்து வரும்
சனாதன தர்ம வழி வந்த
சந்ததிகள் நாங்கள்.

பொறுமைக்கும் எல்லை
உண்டு போக்கிரிகளே
சாது மிரண்டால் இந்த
காடு கொள்ளாது.

அமைதியை குலைக்கும்
அந்நிய கைக் கூலிகளுக்கு
சாவு மணியடிக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை.

ஒன்று படுவோம் உயர்வடைவோம்

ஜெய் ஹிந்த் !!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...