ஆடி உற்சவம்
ஆடி மாத உற்சவத்தில்
அழகிய அலங்காரத்தில்
அட்டகாசமாக அம்மன்
பவனி வருகிறாள்.
தாரை தப்பட்டை முழங்க
புஷ்ப மாலைகள் பூண்டு
பல்லக்கில் எறி அவள்
பவனி வருகிறாள்.
ஆளுயர விளக்கொளியில்
ஆரவார கோஷம் நடுவில்
அருள்பாலிக்க நமைத் தேடி
பவனி வருகிறாள்.
வேப்பிலை நாயகியாம் நாம்
வேண்டும் வரம் தருபவளாம்
இல்லம் தேடி இன்முகமாய்
பவனி வருகிறாள்.
காப்புக் கயிறு கட்டியே
கருமாரியம்மனை தொழுதிட
கவலையெல்லாம் தீர்த்திடவே
பவனி வருகிறாள்.
அலகு குத்தி செடல் போட்டு
விரதம் இருந்து தீ மிதித்து
தாயே உனை வணங்கிடவே
தரித்திரம் தீர்ப்பாயே.
நெய் விளக்குத் திரியிட்டு
எலுமிச்சை மாலை சாற்றி
குங்குமத்தால் அர்ச்சிக்க
குளிர்ந்திடுவாய் நீயே..
* என் வீட்டின் பக்கத்தில் உள்ள நாகாத்தம்மன் ஆலய விழாவைக் குடும்பத்தோடு தரிசித்து அந்த
பரவசத்தில் எழுதியுள்ளேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.07.18
No comments:
Post a Comment