Search This Blog

Thursday, July 26, 2018

கலைஞரே

கலைஞரே

இன்று கிரகணமாம்
கூடவே பௌர்ணமியாம்
தலைவருக்கு ஆகாதென்று
தமிழ் மக்கள் கூறுகிறார்கள்..

எத்தனை கிரகணங்களை
எதிர்த்து வாழ்ந்திருப்பீர்
அமாவாசையும் பௌர்ணமியும்
அசால்ட்டாக கடந்திருப்பீர்..

சத்தியமாய் நீங்கள்
சதம் அடிப்பீர் ஐயா
சாவைக் கண்டு மீண்டும்
எள்ளி நகைப்பீர்..

ஐம்பது ஆண்டுகளாய்
கட்சியின் தலைமை
அமுதத் தமிழ் மொழியால்
கிடைத்த பெருமை..

காவிரி தண்ணீரும்
காவிரி மருத்துவமனையும்
செய்தித் தாள்களின்
தலையங்கமானது..

கடந்த பல ஆண்டுகளில்
உம்மை நலம் விசாரித்த
தலைவர்கள் பலரும் இன்று
உயிரோடு இல்லை..

நூறாண்டு காணப் போகும்
திருக்குவளை மைந்தனே
தேக சுகம் பெற்று நீங்கள்
நீடூழி வாழியவே..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...