Search This Blog

Friday, July 27, 2018

வெள்ளி சிறப்பு கவிதை

வெள்ளி சிறப்பு கவிதை

ஊடலும் கூடலும்
ஒன்றாக சேர்ந்த
காதல் பயணமே
குடும்ப பயணம்..

தித்திப்பு அதிகமானால்
தின்பது திகட்டி விடும்
ஆகாரத்தில் காரம் கூட்ட
அமுதாக உள்ளிறங்கும்..

ஏற்றமும் தாழ்வும் சேர்ந்து
இணைந்ததே வாழ்க்கை
ஏமாற்றம் கொள்ளாமல்
இணைபிரியாதிருங்கள்..

சின்ன சின்ன சண்டையிட்டு
செல்லமாய் கொஞ்சிப் பேசி
மனக் கவலையெல்லாம் தம்
மனைவியிடம் தீர்த்திடுங்கள்..

கவலைகளை மறந்திட
கண்டபடி திரியாமல்
கட்டிய மனையாளிடம்
காதலுடன் இருந்திடுங்கள்..

💐💐💐💐💐💐💐💐💐

வார கடைசி  தின கவிதை ☺☺
(Week end Spl Kavithai)

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...