தலைவரே
தள்ளாடும் வயதினிலும்
தளராது தமிழ் கொண்டு
தமிழர்களை மகிழ்வித்த
தலைவா நீ வாழ்க !!
ஐம்பது ஆண்டுகளாய்
அயராது கட்சிப் பணியில்
அண்ணாவின் வழி நிற்கும்
அய்யா நீ வாழ்க !!
முத்தமிழில் கரை தேர்ந்து
மூப்படைந்தும் ஓயாமல்
முப்போதும் உழைத்து வரும்
முதல்வா நீ வாழ்க !!
குறளுக்கு விளக்கம் தந்த
குரல் மூலம் கூட்டம் சேர்த்த
கழகத்தின் கதிரவனே
கண்மணியே நீ வாழ்க !!
கரைபுரண்டு காவிரியில்
தண்ணீர் வெள்ளம், கூடவே
கரைபுரண்டு காவிரியில்
கண்ணீர் வெள்ளம்..
அகவை தொண்ணூற்றைத்
தாண்டிய இளைஞரே, உமது
ஆயுசும் நீடிக்க வேண்டும்
ஞாயிறே..
" நான் நீ எனக் கூறும் போது
உதடுகள் ஒட்டாது, ஆனால்
நாம் எனும் கூரும் போது தான்
உதடுகள் ஒட்டும் "
வித்தியாசமாக சிந்தித்து
முத்து முத்தாய் எழுதுவதில்
முத்துவேலர் மகனுக்கு
ஈடாக எவர் உண்டு ?
உயிர்த்தெழுந்து நீங்கள்
வாரும் அய்யா, மீண்டும்
உயிர்மெய் எழுத்துகளில்
விளக்கம் எழுதும் அய்யா..
தங்கள் தமிழை மட்டும்
ரசித்த கோடானு கோடி
ரசிகர்களில் இந்த
அடியேனும் ஒருவன்..
💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.07.18
No comments:
Post a Comment