ஜடா விநாயகா
கலக்கமுற்ற நேரத்திலே
கணபதியின் துணையுண்டு
காலத்தை வென்றிடவே
கணேசனின் அருளுண்டு
கவலைகளை களைந்திடவே
கயிலை மகன் தயையுண்டு
வல்வினைகள் போக்கிடவே
விநாயகரின் க்ருபையுண்டு
ஊழ்வினைகள் விலக்கிடவே
உமை மைந்தன் வருவதுண்டு
உற்சாகமும் தந்திட என்றும்
விக்னேஸ்வரன் நமக்குண்டு
குருவைய்யர் கணபதியின்
தாள் படிந்து சரணடைந்தால்
குறையாவும் தீர்ந்து விடும்
குஷியான வாழ்வமையும்
ஜடமாக இருக்கும் நமை
திடமாக மாற்றுகின்ற ஸ்ரீ
ஜடா விநாயகரின் பதத்தை
தணியாது பற்றிடுவோம்.
ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.07.18
No comments:
Post a Comment