Search This Blog

Saturday, July 7, 2018

ஜடா விநாயகா

ஜடா விநாயகா

கலக்கமுற்ற நேரத்திலே
கணபதியின் துணையுண்டு
காலத்தை வென்றிடவே
கணேசனின் அருளுண்டு

கவலைகளை களைந்திடவே
கயிலை மகன் தயையுண்டு
வல்வினைகள் போக்கிடவே
விநாயகரின் க்ருபையுண்டு

ஊழ்வினைகள் விலக்கிடவே
உமை மைந்தன் வருவதுண்டு
உற்சாகமும் தந்திட என்றும்
விக்னேஸ்வரன் நமக்குண்டு

குருவைய்யர் கணபதியின்
தாள் படிந்து சரணடைந்தால்
குறையாவும் தீர்ந்து விடும்
குஷியான வாழ்வமையும்

ஜடமாக இருக்கும் நமை
திடமாக மாற்றுகின்ற ஸ்ரீ
ஜடா விநாயகரின் பதத்தை
தணியாது பற்றிடுவோம்.

ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...