நாகம்மத்தை
பிறந்தவர் இறப்பது நியதி
ஆனால் சிலர் இறந்ததும் நம்
நெஞ்சு விம்மி புடைக்கிறதே
நட்பு என்பதாலா இல்லையெனில்
நெருங்கிய சொந்தம் என்பதாலா
ஏதோ ஒன்று இனம் புரியாத ஓர்
வலியை மனதிற்குள் அழுத்தும்
உண்ண உணவு இறங்காது
படுத்திட உறக்கம் பிடிக்காது
அக்கம் பக்கத்தினர் எல்லாம்
அன்னியராய் இருக்கும் பட்சத்தில்
அனைவரையும் ஒருங்கிணைத்து
அம்மாவாய் அன்பு பூண்டு
இதமான வார்த்தை பேசி
ஈஸ்வரியாய் இருப்பவருண்டு
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக
நமது அக்ராஹாரத்தில் இருந்த
நாகம்மத்தையும் அப்படியே
தனது மறைவின் மூலம்
ஒரு பெரிய வெற்றிடத்தை
இன்று உருவாக்கியுள்ளார்
அக்ரஹாரத்தில் எமது வீட்டின்
வலப்பக்கம் சரோஜா அத்தை
இடப்பக்கம் நாகம்மத்தை என்று
இருபுறமும் இவர்கள் இருந்து
எங்களை வளர்த்தார்கள் அன்று
எங்கு போய்த் தேடுவது இனி
இந்த சொந்த நெஞ்சங்களை
இழந்து வாடுவது இவர்களது
குடும்பத்தினர் மட்டுமல்ல
ஒட்டுமொத்த அக்ரஹாரமும் தான்
அவரது ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
எல்லோரும் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி 😢😢😢
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.07.2018
No comments:
Post a Comment