Search This Blog

Sunday, July 8, 2018

நாகம்மத்தை

நாகம்மத்தை

பிறந்தவர் இறப்பது நியதி
ஆனால் சிலர் இறந்ததும் நம்
நெஞ்சு விம்மி புடைக்கிறதே

நட்பு என்பதாலா இல்லையெனில்
நெருங்கிய சொந்தம் என்பதாலா

ஏதோ ஒன்று இனம் புரியாத ஓர்
வலியை மனதிற்குள் அழுத்தும்
உண்ண உணவு இறங்காது
படுத்திட உறக்கம் பிடிக்காது

அக்கம் பக்கத்தினர் எல்லாம்
அன்னியராய் இருக்கும் பட்சத்தில்
அனைவரையும் ஒருங்கிணைத்து
அம்மாவாய் அன்பு பூண்டு
இதமான வார்த்தை பேசி
ஈஸ்வரியாய் இருப்பவருண்டு

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக
நமது அக்ராஹாரத்தில் இருந்த
நாகம்மத்தையும் அப்படியே

தனது மறைவின் மூலம்
ஒரு பெரிய வெற்றிடத்தை
இன்று உருவாக்கியுள்ளார்

அக்ரஹாரத்தில் எமது வீட்டின்
வலப்பக்கம் சரோஜா அத்தை
இடப்பக்கம் நாகம்மத்தை என்று
இருபுறமும் இவர்கள் இருந்து
எங்களை வளர்த்தார்கள் அன்று

எங்கு போய்த் தேடுவது இனி
இந்த சொந்த நெஞ்சங்களை

இழந்து வாடுவது இவர்களது
குடும்பத்தினர் மட்டுமல்ல
ஒட்டுமொத்த அக்ரஹாரமும் தான்

அவரது ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
எல்லோரும் பிரார்த்திப்போம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி 😢😢😢

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.07.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...