பயிற்சியே முயற்சி
மனதை ஒருநிலைப் படுத்தி
மனக்கண் முன்னே நடக்கும்
காட்சிகளை நானும் ஓட விட்டேன்
கவின்மிகு சில வார்த்தைகளாக
வரிகளில் சற்றே வார்த்தெடுத்தேன்
சொல்லனா மகிழ்வில் நானும்
சொக்கியே லயித்துப் போனேன்
அலங்கார வார்த்தைகளுடனே
அடுக்கடுக்கான வார்த்தைகளிலே
அழகு நடையில் படைக்கலானேன்
இலக்கிய நடையில் எழுதவில்லை
இலக்கணம் வகுத்து எழுதவில்லை
இரட்டை அர்த்தத்தில் எழுதவில்லை
இச்சைப்பட்ட கற்பனை வரிகளில்
இஷ்டம் போல எழுதலானேன்
கவிதையெழுத கற்பனை வேண்டும்
கவிதையெழுத புலமையும் வேண்டும்
கவிதையெழுத உவமையும் வேண்டும்
கவிதையெழுத மொழித்திறன் வேண்டும்
இவையாவும் எனக்கு இல்லையென்பேன்
எப்பவோ படித்த சின்ன புத்தகங்கள்
பள்ளியில் பயின்ற பாடப் புத்தகங்கள்
நித்தம் நிகழும் சம்பவங்கள் மற்றும்
நண்பர்கள் பெரியோர் உந்துதல்கள்
என்றும் என்னை எழுத வைக்கின்றது
கவிச்சக்கரவர்த்தியையும்
காளமேகப் புலவனையும்
பாரதியையும், பாவேந்தரையும்
இளங்கோவடிகள் என பலவும்
படித்து பயிற்சி எடுக்க வேண்டும்
முயற்சிக்கு ஓய்வில்லை
மூளைக்குத் தொய்வில்லை
மூஷிகனின் அருள் கொண்டு
முனைந்து எழுதிடுவேன் நான்
முப்போதும் பயின்றிடுவேன்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.08.18
No comments:
Post a Comment