Search This Blog

Thursday, August 16, 2018

அடல் பிஹாரி வாஜ்பாய்

அடல் பிஹாரி வாஜ்பாய்

அடல் என்றால்
திடம் என்று பொருள், ஆம்
அடல் பிஹாரி வாஜ்பாய் தனது
கொள்கையில் திடம் கொண்டவர்..

ஜன சங்கம் என்ற விதையை
பலத்த போராட்டத்துக்கு மத்தியில்
பாரதீய ஜனதா பார்ட்டி என்ற
பெரிய ஆலமரமாக உருவாக்கியவர்..

உறுப்பினரே இல்லாத
பாராளுமன்றத்தில்
தனி ஒருவராக பலகாலம்
சமாளித்து நின்றார்..

பாரத தேசத்திற்கே
பெருமை சேர்க்கும்
பொக்ரான் சோதனை
நடக்கக் காரணமானவர்..

கவிதை மழை பொழியும்
அண்ணாரின் பேச்சை
எதிரணியினரும் கூட
ஏகோபித்து கேட்டதுண்டு..

எவரையும் புண்படுத்தாத
எவரும் புண்படுத்த நினைக்காத
இணக்கமான மென்மை
மனிதர் இவர்..

அவரது உடல் நலம் பூரண
குணம் பெற்றிட வேண்டி
பிரார்த்திக்கும் இந்தியர்களில்
அடியேனும் ஒருவன்..

💐💐💐🙏🙏🙏👏👏👏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...