அடல்ஜி
வயதில் மட்டும்
மூத்த தலைவரை
இன்று நமது நாடு
இழக்கவில்லை..
அனுபவத்தில் மூத்த
அரிய பெருமகனை
உண்மையில் இன்று
இழந்துள்ளது..
சவால்கள் நிறைந்த
சந்தர்ப்பங்களில்
சாமர்த்தியமாக
சமாளித்தவர்..
ஆரம்பப் புள்ளி வைத்து
அஸ்திவாரம் பலமாயிட்டு
பாரதீய ஜனதா கட்சியை
பாரதத்தில் வளர்த்தவர்..
தங்க நாற்கர சாலை
திட்டத்தினை வகுத்து
தடையிலா பயணத்தை
தந்தவரும் இவரே..
பதிமூன்று நாட்கள்
பதினொரு மாதங்கள்
பின் பொறுத்து ஜெயித்து
பதிமூன்றாவது பிரதமர்..
இவர் போட்டுத் தந்த
பாதையில் தான் இன்று
அபார வளர்ச்சி கண்டுள்ளது
அவரது கட்சி..
தனக்கென தனியாக
குடும்பம் இவர்க்கில்லை
தாய்த் திருநாட்டைத் தவிர
கவனம் வேறிருந்ததில்லை..
RIP - REST IN PEACE எனக் கோராமல்
RIP - RETURN IF POSSIBLE என்போம்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.08.18
No comments:
Post a Comment