அடல்ஜி
ஆகஸ்ட் பதினைந்தில்
ஆயுசை முடித்து வைக்க
கூற்றுவன் வந்தானாம்
ஆஸ்பித்திரி வாசலுக்கு..
இன்று போய் நாளை வா
தவறாமல் நான் வருவேன்
தருமனே சென்று வருக என
அவனிடம் கூறினாராம்..
இன்றைக்கும் நாளைக்கும்
என்ன வித்தியாசம் என்று
சற்று நீர் எடுத்துரைப்பீர்
என்றான் காலன்..
எமதர்மராஜனே ;
முழுக்கம்பத்தில் ஏற்றிடும்
மூவர்ணக் கொடி இன்று
அரைக்கம்பத்தில் பறக்கலாமோ
என்று அடல்ஜி கூறினாராம்..
இங்ஙனம் இறப்பிலும் தனியாக
முத்திரை பதித்தவர் மாமனிதர்
ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.08.18
No comments:
Post a Comment