Search This Blog

Friday, August 17, 2018

அடல்ஜி

அடல்ஜி

ஆகஸ்ட் பதினைந்தில்
ஆயுசை முடித்து வைக்க
கூற்றுவன் வந்தானாம்
ஆஸ்பித்திரி வாசலுக்கு..

இன்று போய் நாளை வா
தவறாமல் நான் வருவேன்
தருமனே சென்று வருக என
அவனிடம் கூறினாராம்..

இன்றைக்கும் நாளைக்கும்
என்ன வித்தியாசம் என்று
சற்று நீர் எடுத்துரைப்பீர்
என்றான் காலன்..

எமதர்மராஜனே ;

முழுக்கம்பத்தில் ஏற்றிடும்
மூவர்ணக் கொடி இன்று
அரைக்கம்பத்தில் பறக்கலாமோ
என்று அடல்ஜி கூறினாராம்..

இங்ஙனம் இறப்பிலும் தனியாக
முத்திரை பதித்தவர் மாமனிதர்
ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...