அதிசயமான ஆகஸ்ட் மாதம்
ஒரே வருடத்தில் பிறந்த
இரு வேறு தலைவர்கள்
ஒரே மாதத்தில் மரித்தும்
போயுள்ளனர்..
வடக்கில் ஒருவர் எனில்
தெற்கில் இன்னொருவர்
முன்னவர் தேசியம் எனில்
பின்னவர் திராவிடம்..
கவின்மிகு பேச்சால்
கவித்திறனால் இருவரும்
தத்தமது மொழியில் மிகவும்
புலமை / புகழ் பெற்றவர்கள்..
மத்தியில் ஆட்சி புரிந்து
மாநிலங்களை கவர்ந்தவர்
மாநிலத்தில் ஆட்சி புரிந்து
மக்களை இவர் கவர்ந்தவர்..
இருவருக்குமிடையே சில
முரண்பாடுகளும் உண்டு
மறைந்து போன பின்னே
மதிப்பீடு செய்யலாகாது..
திரித்து பதிவு செய்ய
எமக்கு விருப்பமில்லை
வரிகளைப் படிப்போருக்கு
வார்த்தை பொருள் விளங்கும்..
அவர்களது ஆன்மா சாந்தியடைய
ஆண்டவனை பிரார்த்திப்போம்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.08.18
No comments:
Post a Comment