Search This Blog

Monday, August 13, 2018

ஆண்டாள்

ஆண்டாள்

ஆடிப் பூரத்து
அம்பிகையே
சூடிக் கொடுத்த
சுடர்க் கொடியே

வில்லிபுத்தூரின்
வடிவழகே நீ
கண்ணனைக்
கவர்ந்த காரிகையே

பக்தியால் பரந்தாமனை
பாசப் பிணைப்பிட்டு
பாருக்கு உணர்த்திய
பைங்கிளியே

திருப்பாவையருளிய
திருப் பாவையே
திருமாலை சரணடைந்த
அருட் பாவையே

அகமுருகி ஆண்டாளை
அர்ச்சித்து வழிபடவே
அஷ்ட ஐஸ்வர்யமும் கிட்டும்
அரங்கனின் அருளும் கிட்டும்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...