ஆண்டாள்
ஆடிப் பூரத்து
அம்பிகையே
சூடிக் கொடுத்த
சுடர்க் கொடியே
வில்லிபுத்தூரின்
வடிவழகே நீ
கண்ணனைக்
கவர்ந்த காரிகையே
பக்தியால் பரந்தாமனை
பாசப் பிணைப்பிட்டு
பாருக்கு உணர்த்திய
பைங்கிளியே
திருப்பாவையருளிய
திருப் பாவையே
திருமாலை சரணடைந்த
அருட் பாவையே
அகமுருகி ஆண்டாளை
அர்ச்சித்து வழிபடவே
அஷ்ட ஐஸ்வர்யமும் கிட்டும்
அரங்கனின் அருளும் கிட்டும்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.08.18
No comments:
Post a Comment