Search This Blog

Saturday, September 22, 2018

புரட்டாசி பிரதோஷம்

புரட்டாசி பிரதோஷம்

அற்புதமான நாள் இன்று

நடராஜ மூர்த்தியைத் துதிக்க
சனிக்கிழமை பிரதோஷமும்
நாராயணனை வழிபட முதல்
புரட்டாசி சனி விரதமும்..

சைவர்களும் வைணவர்களும்
செமத்தியாக பூஜிக்கும் நாள்
ஹரி ஹரனை சேர்ந்து சேவிக்க
சிதம்பரத்திற்கு வாருங்கள்..

பாம்பின் மேல் பள்ளி கொண்ட
தில்லை கோவிந்த ராஜரையும்
பாம்பினை சூடி ஆடுகின்ற ஸ்ரீ
சபாநாயகரையும் சேவியுங்கள்..

திருச்சிற்றம்பலத்தை தரிசித்து
திருச்சித்திரக்கூடத்தை துதித்து
பெருமானையும் பெருமாளையும்
பூசித்து மகிழுங்கள்..

நெடுக நின்றாடுபவனும் ஒன்றே
நீண்டு நெடுக படுத்தவனும் ஒன்றே
நாமம் வெவ்வேறாகவே இருப்பினும்
நாமமும் பட்டையும் ஒன்றே..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.09.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...