புரட்டாசி பிரதோஷம்
அற்புதமான நாள் இன்று
நடராஜ மூர்த்தியைத் துதிக்க
சனிக்கிழமை பிரதோஷமும்
நாராயணனை வழிபட முதல்
புரட்டாசி சனி விரதமும்..
சைவர்களும் வைணவர்களும்
செமத்தியாக பூஜிக்கும் நாள்
ஹரி ஹரனை சேர்ந்து சேவிக்க
சிதம்பரத்திற்கு வாருங்கள்..
பாம்பின் மேல் பள்ளி கொண்ட
தில்லை கோவிந்த ராஜரையும்
பாம்பினை சூடி ஆடுகின்ற ஸ்ரீ
சபாநாயகரையும் சேவியுங்கள்..
திருச்சிற்றம்பலத்தை தரிசித்து
திருச்சித்திரக்கூடத்தை துதித்து
பெருமானையும் பெருமாளையும்
பூசித்து மகிழுங்கள்..
நெடுக நின்றாடுபவனும் ஒன்றே
நீண்டு நெடுக படுத்தவனும் ஒன்றே
நாமம் வெவ்வேறாகவே இருப்பினும்
நாமமும் பட்டையும் ஒன்றே..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.09.18
No comments:
Post a Comment