அம்மையப்பனுக்கு அபிஷேகம்
ஆனந்த தாண்டவத்திற்கு
அபிஷேகமாம் தில்லையில்
ஆருத்ரா மூர்த்திக்கு அற்புத
அபிஷேகமாம்..
ஆண்டிற்கு ஆறு முறை இங்கு
அபிஷேகமாம் தரிசித்திட
ஆயுசுக்கும் ஆனந்தமளிக்கும்
அபிஷேகமாம்..
சபாநாயகருக்கு இன்று
அபிஷேகமாம் சிவகாம
சுந்தரி சமேதராக இன்று
அபிஷேகமாம்..
ஊர்த்துவ தாண்டவத்திற்கு
அபிஷேகமாம் உமையவள்
உடனாக ஜம்மென்று நடக்கும்
அபிஷேகமாம்..
சித்சபையிலே இருக்கும்
சபாபதிக்கு அபிஷேகமாம்
கனகசபைக்கு எழுந்தருளி
கண்குளிர அபிஷேகமாம்..
புரட்டாசி மாதத்தில் இன்று
அபிஷேகமாம் வாழ்வில்
புண்ணியம் செய்ய மட்டில்
கிட்டும் அபிஷேகமாம்..
அற்புதமான அபிஷேகம் காண
அனைவரும் வாருங்கள் எங்கள்
தீக்ஷிதர்கள் பூஜிக்கும் அழகை
தில்லைக்கு வந்து பாருங்கள்..
சித்சபேசா சிவ சிதம்பரம்..
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.09.18
No comments:
Post a Comment