Search This Blog

Friday, September 28, 2018

வாரக் கடைசி

வாரக் கடைசி

வெள்ளிக் கிழமையில்
வான் மதியைப் போல
மகிழ்ச்சியில் நம் முகம்
பிரகாசமாய் இருக்கும்.

சனியும் ஞாயிறும்
களிப்பில் குதூகளித்து
பின் தேய்ப்பிறை போல
முகம் பொலிவிழக்கும்.

அமாவாசை நிலவு போல
திங்கட்கிழமை முகமிருக்கும்
பௌர்ணமி முழு நிலவாய்
வெள்ளியன்று ஜொலிக்கும்.

மாதம் ஒரு முறை மட்டுமே வரும் அமாவாசையும் பௌர்ணமியும்
வாரத்தில் இருமுறை உணர்வதை
அலுவலகத்தில் வந்து பாருங்கள்.

விடுமுறைக்குச் செல்லும்
விளையாட்டுக் குழந்தைகள் போல
வாரக் கடைசியில் அலுவலகத்தை
விட்டுச் செல்வதைப் பாருங்கள்..

வயதால் பெரியவராய் ஆனாலும்
உள்ளத்தே அனைவரும் சிறார்களே..

😃😃😁😁😁😁😀😀😀

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..

சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.09.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...