வாரக் கடைசி
வெள்ளிக் கிழமையில்
வான் மதியைப் போல
மகிழ்ச்சியில் நம் முகம்
பிரகாசமாய் இருக்கும்.
சனியும் ஞாயிறும்
களிப்பில் குதூகளித்து
பின் தேய்ப்பிறை போல
முகம் பொலிவிழக்கும்.
அமாவாசை நிலவு போல
திங்கட்கிழமை முகமிருக்கும்
பௌர்ணமி முழு நிலவாய்
வெள்ளியன்று ஜொலிக்கும்.
மாதம் ஒரு முறை மட்டுமே வரும் அமாவாசையும் பௌர்ணமியும்
வாரத்தில் இருமுறை உணர்வதை
அலுவலகத்தில் வந்து பாருங்கள்.
விடுமுறைக்குச் செல்லும்
விளையாட்டுக் குழந்தைகள் போல
வாரக் கடைசியில் அலுவலகத்தை
விட்டுச் செல்வதைப் பாருங்கள்..
வயதால் பெரியவராய் ஆனாலும்
உள்ளத்தே அனைவரும் சிறார்களே..
😃😃😁😁😁😁😀😀😀
ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..
சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.09.18
No comments:
Post a Comment