சபரிமலை சட்டம்
சபரி மலையினில்
அனைத்து வயது
பெண்களும் சாமி
தரிசனம் செய்யலாம்
சட்டம் இயற்றியுள்ளது
நம் நிதித் துறை..
அநாதி காலமாய் நிலவும்
நடைமுறை வழக்கத்தை
பெண் விடுதலை என்னும்
பெயர் கொண்டு எதிர்த்து
வாகையும் சூடியுள்ளனர்..
கடவுளை நம்பிடாத
நாத்திகர்களுக்கும்
கம்யூனிஸ்டுகளுக்கும்
அக்கறை ஏன் என்று
சத்தியமாய் புரியவில்லை..
சில அந்நிய மதத்து
இயக்கங்களும் சேர்ந்து
அரசியல்வாதிகளுடன்
கைகோர்த்துக் கொண்டு
போராடியுள்ளனர்..
சமத்துவம் எனும் பெயரில்
சமூகம் மெல்ல மெல்ல
சீரழிந்து வருவதைக் காண
சகிக்க ஏனோ இயலவில்லை..
குளித்தப் பின் தான் போகணும்
கருவறைக்கு அருகில் ஆண்கள்
மேல் வஸ்திரம் இலாது போகணும்
லுங்கி அணிந்து போகலாகாது
இவைகளும் கூட அடக்குமுறைகள்
என சீக்கிரமே அறிவிக்கப்படும்..
இன்னும் இவ்வாரெல்லாம்
எத்தனை சோதனைகளோ
எமது இந்து மதத்திற்கு
இறைவா யாமறியேன்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.09.18
No comments:
Post a Comment