Search This Blog

Friday, September 28, 2018

சபரிமலை சட்டம்

சபரிமலை சட்டம்

சபரி மலையினில்
அனைத்து வயது
பெண்களும் சாமி
தரிசனம் செய்யலாம்
சட்டம் இயற்றியுள்ளது
நம் நிதித் துறை..

அநாதி காலமாய் நிலவும்
நடைமுறை வழக்கத்தை
பெண் விடுதலை என்னும்
பெயர் கொண்டு எதிர்த்து
வாகையும் சூடியுள்ளனர்..

கடவுளை நம்பிடாத
நாத்திகர்களுக்கும்
கம்யூனிஸ்டுகளுக்கும்
அக்கறை ஏன் என்று
சத்தியமாய் புரியவில்லை..

சில அந்நிய மதத்து
இயக்கங்களும் சேர்ந்து
அரசியல்வாதிகளுடன்
கைகோர்த்துக் கொண்டு
போராடியுள்ளனர்..

சமத்துவம் எனும் பெயரில்
சமூகம் மெல்ல மெல்ல
சீரழிந்து வருவதைக் காண
சகிக்க ஏனோ இயலவில்லை..

குளித்தப் பின் தான் போகணும்
கருவறைக்கு அருகில் ஆண்கள்
மேல் வஸ்திரம் இலாது போகணும்
லுங்கி அணிந்து போகலாகாது
இவைகளும் கூட அடக்குமுறைகள்
என சீக்கிரமே அறிவிக்கப்படும்..

இன்னும் இவ்வாரெல்லாம்
எத்தனை சோதனைகளோ
எமது இந்து மதத்திற்கு
இறைவா யாமறியேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.09.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...