Search This Blog

Sunday, September 23, 2018

பிறந்த நாள் வாழ்த்து

என்னவளுக்கு இன்று
பிறந்த நாள் 💐💐💐💐
என்னவென்று அவளுக்கு
வாழ்த்து நான் கூறுவேன்..

அவளுடைய பெற்றோர்க்கு
முதல் வாழ்த்து கூறுவேன்
என்னுடைய பெற்றோர்க்கு
அடுத்து வாழ்த்து கூறுவேன்..

சோர்ந்து வரும் வேளை
சேர்ந்து சுணங்காமல்
சுறுசுறுப்பாய் இல்லத்தை
இனிதே நடத்திடுவாள்..

என்னுடைய நடமாடும்
வங்கி அநேகமாய் அவளே
மாதக் கடைசிகள் எப்பவும்
மனைவியின் மணிபர்ஸில்..

குழந்தைகளைப் படிப்பிக்கும்
ஆசிரியையும் இவளே
குடும்பத்தைப் பேணிடும் நல்
அம்மாவும் இவளே..

போட்டியும் பொறாமையும்
நிறைந்த உலகை எதிர்கொள்ள
புன்சிரிப்பு ஏந்திய பெண்மணி
மனைவியாய் அமைதல் வேணும்..

இன்முகத்தோடு இதழினில்
புன்னகையை தவழ விட்டு
இன்று போல் என்றென்றும்
பல்லாண்டு வாழியவே..

அன்புடன், பாலு 💐💐💐💐

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...