எனக்குள் நான்
எனக்குள் நானே
எட்டிப் பார்க்கிறேன்
என் வாழ்வை எண்ணி
வியந்து பார்க்கிறேன்..
கால் நூற்றாண்டாக
கரன்சியைப் பெற்றும்
கையில் நில்லாமல்
கரைந்து போகுது..
வரவும் செலவும்
சமமாயிருக்கையில்
வருங்கால சேமிப்பு
விய(ர்)க்க வைக்குது..
நடப்பதை எண்ணி
விசனப்படாமல்
நாட்களை நகர்த்த
வழியும் செய்தேன்..
நாளை விடியும் எனும்
நம்பிக்கை கொண்டு
நானு(ளு)ம் பயணிக்க
முடிவு செய்தேன்..
ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.09.18
No comments:
Post a Comment