முதியோர் தினம்
வீடு முழுவதும்
குழந்தைகளும்
திண்ணை நிறைய
பெரியோர்களும்
இருந்த காலங்கள்
பொற்காலம் ஆகும்.
தாத்தா பாட்டியின் மேல்
காலை போட்டுக் கொண்டு
கதை கேட்டபடித் தூங்கும்
சுகத்திற்கீடாக இவ்வுலகில்
ஏதும் இல்லை எனலாம்.
அம்மா அப்பாவிடம்
அடம் பிடிக்கும்
குழந்தைகள் கூட
தாத்தா பாட்டியிடம்
மிகவும் சமர்த்தாக
இருப்பதுண்டு.
கூட்டுக் குடும்பம் எனும்
கோவில்கள் குறைந்து
தனி மரமாய் குடும்பங்கள்
துளிரத் தொடங்கிய பின்
சிறிய அறையினுள் அவை
சிறைபட்டுப் போயின.
கணவனும் மனைவியும்
வேலைக்குச் செல்வதால்
இரண்டு வயதிற்குள்
குழந்தையை பள்ளிக்கு
அனுப்புவது இப்போது
எங்கும் வாடிக்கை ஆனது.
வயதான பெற்றோர்க்கு
முதியோர் காப்பகமும்
பிஞ்சு குழந்தைகளுக்கு
குழந்தைகள் காப்பகமும்
நகரங்களில் பெருகுவது
வேதனைக்குரியது.
கதை சொல்ல வீட்டில்
பெரியோர்கள் இல்லை
கைப்பேசியும் டீவியும்
குழந்தைக்கு பிடிக்குது
கார்ட்டூனைக் காட்டினால்
உணவும் உள்ளிறங்கும்.
இன்றைய இளைஞர்கள்
நாளைய தலைவர்கள்
இன்றைய சிறார்களே
நாளைய பெரியோர்கள்
எப்படி போற்றுகின்றோமோ
அப்படியே போற்றப்படுவோம்.
வாய்ப்பு உள்ளவர்கள்
வயோதிகம் பார்க்காது
வயதான பெரியோரை
வீட்டினுள் போற்றிடுங்கள்
வருங்கால சந்ததிக்கு
வளமாய் வழி காட்டுங்கள்.
முதியோர்களைக்
கொண்டாடுவோம்
மகிழ்ச்சியோடு
வாழ்ந்திடுவோம்.
உலக முதியோர் தினத்திற்கு
எழுதப்பட்டது. 💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.10.18
No comments:
Post a Comment