Search This Blog

Monday, October 1, 2018

காதலர் கள்

காதலர் கள்

கள்ளு குடிக்க
போதை ஏறும்
காதலும் கள்ளு
மாதிரி தான்..

மனசு கிறங்கி
மத்தாப்பு ஆகும்
மூளை மழுங்கி
மப்பு ஏற்றிடும்
சிந்தனை சிதறி
சிரிக்கத் தோணும்
சமைத்த உணவும்
சுவைக்க தோணாது
சதா சிந்தனையில்
சிறகடித்து கிடக்கும்
வீட்டுக்கு மறைவாய்
கள்ளு குடிப்பர்
அது போலத் தான்
வீட்டுக்குத் தெரியாது
காதலும் புரிவர்..

இப்போது கூறுங்கள்
கள்ளும் காதலும்
ஒன்று தானே..

சும்மா ஒரு கற்பனை 😁😅

😊😊😊😊😊😊😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.10.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...