Search This Blog

Monday, October 15, 2018

அப்துல் கலாம்

அப்துல் கலாம்

மதங்களை கடந்த
மாமனிதர், தமிழக
மண்ணில் பிறந்த
தவப் புதல்வர்..

குரானும் ஓதுவார்
கீதையும் படிப்பார்
தாய் மண்ணிற்காக
திருமணத்தை துறந்தவர்..

இராஷ்டிரபதி பதவியேற்ற
இராமேஸ்வரத்தார், இவர்
பொக்ரான் சோதனையிட்ட
பொறியாளர் ஆவார்..

எளிமைக்கு இருப்பிடமாய்
என்றுமே வலம் வந்தவர்
ஏழ்மையிலே வளர்ந்தும்
எட்டாத உயரம் சென்றார்..

மாணவச் சமுதாயத்தின்
மகத்துவத்தை உணர்ந்து
பள்ளி கல்லூரிகளில்
பங்கேற்று பேசியவர்..

தூக்கத்தில் காண்பது
கனவு அல்ல தூங்க
விடாமல் பண்ணும்
லட்சியமே கனவென்றார்..

மெத்தப் படித்திருந்தும்
அடக்கத்தின் இருப்பிடமாய்
தான் வளர்ந்த விதத்திலே
தரணியில் தலை நிமிர்ந்தவர்..

அக்கினி சிறகுகள் படைத்த
ஆ.ப. ஜெ. அப்துல் கலாம்
ஐயாவின் பிறந்த நாளில்
அவர் பாதம் பணிகின்றோம்.

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.10.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...