சிறு சிந்தனைகள்
ஒப்பிட்டு பார்ப்பதை
நிறுத்தினால் போதும்
ஓராயிரம் இன்னல்கள்
தானாகத் தீரும்.
வீணான கவலைகளை
நெஞ்சினிலே சுமந்து
வாழ்க்கையிலே விரக்தி
அடையவது வீணாம்.
நேற்றைக்கு நடந்ததை
மாற்ற முடியாது
நாளைக்கு நடப்பதை
கணிக்க முடியாது.
இன்றைக்கு நடப்பதில்
இயல்பாக இருப்போம்
இறைவனைப் பணிந்து
இன்முகமாய் நடப்போம்.
நாளைக்கு உயிர்ப் பிச்சை
நல்கிடும் ஆண்டவனுக்கு
ஒவ்வொரு இரவும் நாம்
நன்றி தெரிவிப்போம்..
நினைத்தேன் எழுதுகிறேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.10.18
No comments:
Post a Comment