Search This Blog

Thursday, October 18, 2018

சரஸ்வதி தேவி

சரஸ்வதி தேவி

வீணான மனக்கவலைத்
தீர்த்து வைப்பவள்
வீணை சரஸ்வதி என்ற
பெயரைக் கொண்டவள்.

கல்விக் கண் திறந்து வைக்கும்
கருணை உள்ளத்தால்
கலைவாணி எனும் பெயரை
சூடிக் கொண்டவள்..

நல்வாக்கு சித்தி தரும்
தேவியுமாவாள்
வேண்டும் வரம் தந்தருளும்
வாணியும் அவாள்..

வெண்  தாமரை மலரினிலே
வீற்றிருப்பவள்
வித்யாரூபிணி என்ற
நாமம் கொண்டவள்..

நான்முகனின் கரம்பிடித்த
நாயகியாவாள்
பிரம்மி எனும் பெயர் பூண்ட
பிராட்டியும் அவாள்..

சகல சௌபாக்கியம்
கொடுக்கும் சாவித்ரியாம்
சத்தியலோகத்தில் இருக்கும்
சாரதையும் அவாள்..

ஆயகலை அனைத்திற்கும்
அதிபதியும் ஆவாள்
அண்டியவர் குறை தீர்க்கும்
அம்பிகை ஆவாள்..

கூத்தனூரில் கோவில் கொண்ட
கலை மகளும் இவளே
கும்பிடுவோர் வினை தீர்க்கும்
குலமகள் இவளே..

நவராத்திரி நந்நாளில்
நம்பிக்கையுடனே
நாம் அவளின் திருவடியை
நாடி பணிவோம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...