Search This Blog

Tuesday, October 23, 2018

மனதை ஏதோ செய்கிறது

மனதை ஏதோ செய்கிறது

நமக்கு மிகவும்
பிடித்தமானவர்கள்
உடல் நிலம் குன்றி
உள்ளதை அறியும் போது
மனதை ஏதோ செய்கிறது..

இவ்வுலகம் முழுமையும்
தெரிந்தும் தெரியாமலும்
எண்ணற்ற உறவுகளின்
எண்ணற்ற உயிர்களின்
நிலைமையும் இவ்வாறே..

துயில் எழுந்தவுடன்
ஈசனைப் பிரார்த்திப்போம்
தினமும் மீண்டு(ம்)
துயிலச் செல்லுகையில்
நன்றியினை தெரிவிப்போம்..

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
இறைவன் நமக்களித்த
பிச்சையில் வாழ்கின்றோம்..

நல்லதையே புரிவோம்
நல்லதையே பேசுவோம்
நல்லதையே காண்போம்
நல்லதையே கேட்போம்
நல்லதையே நினைப்போம்..

லோகா ஸமஸ்தா
ஸுகினோபவந்து:
ஸர்வே ஜனா:
ஸுகினோபவந்து:

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.10.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...