மனதை ஏதோ செய்கிறது
நமக்கு மிகவும்
பிடித்தமானவர்கள்
உடல் நிலம் குன்றி
உள்ளதை அறியும் போது
மனதை ஏதோ செய்கிறது..
இவ்வுலகம் முழுமையும்
தெரிந்தும் தெரியாமலும்
எண்ணற்ற உறவுகளின்
எண்ணற்ற உயிர்களின்
நிலைமையும் இவ்வாறே..
துயில் எழுந்தவுடன்
ஈசனைப் பிரார்த்திப்போம்
தினமும் மீண்டு(ம்)
துயிலச் செல்லுகையில்
நன்றியினை தெரிவிப்போம்..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
இறைவன் நமக்களித்த
பிச்சையில் வாழ்கின்றோம்..
நல்லதையே புரிவோம்
நல்லதையே பேசுவோம்
நல்லதையே காண்போம்
நல்லதையே கேட்போம்
நல்லதையே நினைப்போம்..
லோகா ஸமஸ்தா
ஸுகினோபவந்து:
ஸர்வே ஜனா:
ஸுகினோபவந்து:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.10.18
No comments:
Post a Comment