அன்னாபிஷேகம்
ஐப்பசி திங்களில்
பௌர்ணமி நாளில்
ஐயனுக்கு செய்யும்
அபிஷேகம் அதுவும்
அன்னத்தால் புரிவது
விஷேஷமாகும்..
அண்டத்தைப் படைத்த
ஆண்டவனுக்கு பலதாய்
அர்ச்சனைகள் நாமும்
செய்தாலும் சிறப்பாய்
அன்னத்தால் புரிவது
விஷேஷமாகும்..
தில்லையம்பதியிலே
ஸ்படிக லிங்கத்துக்கு
நித்தமும் நடக்குதாம்
அபிஷேகம் அதிலும்
அன்னத்தால் புரிவது
விஷேஷமாகும்..
அப்பர் பெருமான் பாடலில்;
அன்னம் பாலிக்கும்
தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்
மேலுமிப்பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு
கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ
இப்பிறவியே..
என உருகிப் பாடியுள்ளார்..
உபநிஷத்தில் கூறியபடி;
அந்நேந வாவா ஸர்வே
ப்ராணா மஹீயந்தே.
அன்னம் ந நிந்த்யாத்
ப்ராணோவா அன்னம்..
அனைத்துக்கும் பிரதானமாக
அன்னமே இருப்பதனால்
அன்னாபிஷேகம் செய்து
ஆண்டவனை மகிழ்விக்கிறோம்..
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.10.18
No comments:
Post a Comment