வெள்ளிக்கிழமை
சிறப்பு கவிதை
ராவோடு ராவாக
வந்திடுவேனே என்
ராசாத்தியே மெய்யாலுமே
கவர்ந்து செல்வேனே.
தூக்கத்திலே நித்தமும்
தேடி வருகின்றாய் எனை
கனவுலகில் காதலிக்க
கூட்டி செல்கின்றாய்.
உன் பிம்பத்தின் நினைப்பினிலே
நான் ஸ்தம்பித்து போகின்றேன்
கனவு ஒருநாள் நனவாகுமென
உன்மத்தமும் அடைகின்றேன்.
கண்ணை மூடி இருக்கையிலே
கண்ணுக்குள் வருகின்றாய்
கனவை விட்டு எழுகையிலே
கலைந்து செல்கின்றாய்.
நிழலாக வருபவளே
நிஜத்தில் வாராயோ
சொப்பனத்தை மெய்ப்பிக்க
சற்று முன்னே வாராயோ..
காதலித்த(க்கும்) குழப்பத்துடன்..
💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.10.18
No comments:
Post a Comment