எங்கள் பாட்டி
தொண்ணூரை
தொட்டு நிற்கும்
தென்னை மரமே
தில்லையிலே
பிறந்து வளர்ந்த
எங்கள் அறமே..
பாசத்தோடு
அணைத்திடும்
பனை மரமே நீர்
பீமலாபுரத்தின்
வம்ச வழி வந்த
எங்கள் புறமே..
வாஞ்சையோடு
அரவணைக்கும்
வாழை மரமே நீர்
கோடா குடும்பம்
செழிக்க வந்த
உயர் தரமே..
மங்காத
புகழ் கொண்ட
மா மரமே நீர்
எழுவரை
ஈன்றெடுத்த
எங்கள் வரமே..
பகைமை
என்றும் பாராத
பாதாம் மரமே
புன்னகையோடு
உலா வந்திடும்
பலா மரமே..
தில்லியிலே
வாழ்ந்து வந்த
தேக்கு மரமே
எல்லையிலா
பக்தி கொண்ட
பாக்கு மரமே..
முகம் சுளிக்காது
முறுவலிக்கும்
முருங்கை மரமே
அழுக்கில்லா
அகம் கொண்ட
அத்தி மரமே..
அவ்வையாக
அணுகிரகிக்கும்
அரச மரமே நீர்
அன்பு என்னும்
விழுது படர்ந்த
ஆல மரமே..
வாரிசுகள்
பல எடுத்த
வேப்ப மரமே
நீர் கருணை
மழை பொழியும்
கொய்யா மரமே..
நோய் நொடியின்றி
வாழ வேண்டும்
நாவல் மரமே நீர்
நூறாண்டு கண்டு
சிறந்திட வேண்டும்
எங்கள் சிதம்பரமே..
விருட்சத்தின்
பெயர் கொண்டு
அர்ச்சித்தேன் உம்மை
கடாக்ஷித்து
அருள வேண்டி
பணிகின்றேன் தம்மை....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் தங்கள் ஆசி கோரும்
பீமலாபுரம் ஆர்.வீ. பாலு
28.10.2018
No comments:
Post a Comment