Search This Blog

Sunday, November 18, 2018

என் ஆசை காதலியே

என் ஆசை காதலியே

கள்வனாய் பரி ஏறி
காதலி உனை நான்
கவர்ந்து செல்ல வேணும்.

கண்மணி உனையே
வர்ணித்து வரிகளில்
கவிதை எழுத வேணும்.

காமம் இல்லாது
காவியம் படைக்க
கண்ணே நீ வேணும்.

கடுகு நுழையாத சிறு
இடைவெளி விட்டு நாம்
இணைந்திருக்க வேணும்.

விலைவாசி ஏற்றத்தில்
விரக்தியும் அடையாமல்
வீட்டை பேணல் வேணும்.

இருப்பதைக் கொண்டு
இன்முகத்துடனே நாமும்
இல்லம் நடத்த வேணும்.

விடுப்பு எடுக்காமல்
வஞ்சியே உன்னருகில்
என்றும் இருக்க வேணும்.

ஆண்டுக்கொரு முறை
பிரசவ வலியெடுத்து நீ
பிள்ளை பெற வேணும்.

ஆண்பிள்ளை நானென
ஆகாயத்தில் குதித்து
மகிழ்ச்சி எய்த வேணும்.

சொத்து சுகத்தை
பெரிதாய் நினைத்து
துவளாதிருக்க வேணும்.

சொந்தத்தின் முன்னே
தலை நிமிர வாழ்ந்து
சாதித்து காட்ட வேணும்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வி. பாலா
18.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...