Search This Blog

Monday, November 19, 2018

ஆண்கள் தினம்

ஆண்கள் தினம்

சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை நானென்று
சிறுவயதில் கேட்டதுண்டு.

சட்டை காலரை அன்று
சற்றே தூக்கி விட்டு
சுற்றி நான் வந்ததுண்டு.

ஆணாதிக்கம் ஓங்கி
பெண் அடங்கிய காலம்
இன்று கனவாக ஆவதுண்டு.

ஆணுக்கு சரிநிகராய்
இட ஒதுக்கீடும் கேட்டு
பெண்கள் சேர்வதுண்டு.

படிப்பிலும் பல காலம்
பெண்டிரே முதன்மையாய்
மதிப்பெண் எடுப்பதுண்டு.

வேலைக்கு சேர்வதிலும்
வித்தியாசம் பாராமல்
வஞ்சிகள் அடைவதுண்டு.

திருமணம் புரிந்த பின்
திணருகின்ற ஆண்களை
வழக்கமாய் காண்பதுண்டு.

சம்சாரம் நடத்துகையில்
சமாளிக்க முடியாமல் ஆண்
சோர்ந்தும் போவதுண்டு.

தாயிடம் தாரத்திடம்
சேயிடம் என்று தினம்
மிகவும் தடுமாறுவதுண்டு.

ஆனால் இன்றும்;

சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை தானென்று
பெருமளவு கேட்பதுண்டு.

சர்வதேச ஆண்கள் தின
நினைவுகளுடன் ....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.  பாலா
19.11. 18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...