இயற்கையோடு
இணைவோம்
கொசுவை அடிக்க
கத்தியை எடுத்தேன்
ஈ யினை விரட்டவே
ஈட்டியைப்பிடித்தேன்
பல்லியை ஒழிக்க
பாய்ந்து சென்றேன்
பூராணை விரட்ட
பதுங்கி நடந்தேன்
கரப்பான் பூச்சியை
கண்டாலே பயந்தேன்
நத்தை அட்டைக்கு
நடுங்கிப் போனேன்
மரவட்டை பார்த்து
மயக்கம் அடைந்தேன்
எறும்பினைக் கண்டு
எகிறிக் குதித்தேன்
எலியைப் பார்த்து
கிலியும் அடைந்தேன்.
இத்தனையும் மிஞ்சி
படமெடுதது வந்தான்
பாம்பு என்கின்ற
பயங்கரவாதி !!!
விவசாய நிலத்தில்
வீட்டைக் கட்டினால்
ஜந்துக்கள் யாவும்
வரத்தானே செய்யும்.
அவற்றின் இடத்தை
ஆக்கிரமித்து இன்று
பட்டாவும் போட்டு
குடியமர்ந்துள்ளோம்
விவசாயம் இல்லை
விளைச்சல் இல்லை
விலைவாசி ஏற்றமோ
விண்ணை எட்டும்.
தூர்வாராத தரிசு நிலங்கள்
நீராதாரங்கள் படு பாதாளம்
ஆறு கிணறுகள் யாவும்
இன்று ஆக்கிரமிப்புகள்.
முந்தைய தலைமுறை
விட்டுச் சென்றதை நமது
பிந்தைய தலைமுறைக்கு
தருவது மரபாம்.
இயற்கைக்கு மாறாய்
இன்னல்கள் புரிந்து
அனைத்தையும் அழித்து
ஆக்கிரமித்துள்ளோம்.
இனியாவது திருந்துவோம்
இயற்கையோடு இணைந்து
வளமான உலகினை நமது
வாரிசுக்கு பரிசளிப்போம்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.11.18
No comments:
Post a Comment