வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை
களைத்து வருகையில்
காபியைத் தருவாள்
கனத்த மனதினை
இலகிடச் செய்வாள்.
அனைத்து கவலையை
அணைத்து தீர்ப்பாள்
சமைத்து ருசியாய்
சுவைத்திட வைப்பாள்.
தனித்து கிடக்கையில்
நினைப்பைத் தருவாள்
இனித்துப் பேசியே
இரசிக்கச் செய்வாள்.
இன்முகத்தோடு என்றும்
இயங்கியே வருவாள்
இல்லத்து அரசியாய்
உள்ளத்தில் இருப்பாள்.
மறு பிறவி இருப்பின்
மஹேஸ்வரா என்னை
மனைவியாய் அவளுக்கு
அமையச் செய்வாய்.
கடன் பட்ட கணக்கைத்
தீர்க்க வேண்டும் என்
கணவனாய் அவளும்
அமைய வேண்டும்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.11.18
No comments:
Post a Comment