Search This Blog

Thursday, November 8, 2018

வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை

களைத்து வருகையில்
காபியைத் தருவாள்
கனத்த மனதினை
இலகிடச் செய்வாள்.

அனைத்து கவலையை
அணைத்து தீர்ப்பாள்
சமைத்து ருசியாய்
சுவைத்திட வைப்பாள்.

தனித்து கிடக்கையில்
நினைப்பைத் தருவாள்
இனித்துப் பேசியே
இரசிக்கச் செய்வாள்.

இன்முகத்தோடு என்றும்
இயங்கியே வருவாள்
இல்லத்து அரசியாய்
உள்ளத்தில் இருப்பாள்.

மறு பிறவி இருப்பின்
மஹேஸ்வரா என்னை
மனைவியாய் அவளுக்கு
அமையச் செய்வாய்.

கடன் பட்ட கணக்கைத்
தீர்க்க வேண்டும் என்
கணவனாய் அவளும்
அமைய வேண்டும்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...