மனமே
மனமும் மனமும்
லயித்திருக்க
மணமாய் பொழுது
கடந்து போகும்.
மனமும் மனமும்
கனத்திருக்க
கணமாய் பொழுது
கடந்து போகும்.
மனமும் மனமும்
தனித்திருக்க
ரணமாய் பொழுது
கடந்து போகும்.
மனமும் மனமும்
பிரிந்திருக்க
பிணமாய் பொழுது
கடந்து போகும்.
பொழுதைக் கடத்துவது
மணி நேரமல்ல அன்றி
மனமே என்பதை இங்கு
உணர்ந்து கொள்வோம்..
சும்மா நினைத்தேன், எழுதுகிறேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.11.18
No comments:
Post a Comment