Search This Blog

Friday, December 14, 2018

கண்ணே மணியே

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

கண்ணே மணியே

வஞ்சியே உந்தன்
வடிவத்தைக் காண
வலிகள் யாவும்
பறக்குதடி.

வார்த்தையாலே
வர்ணிக்க எந்தன்
வாலிப நெஞ்சமும்
தவிக்குதடி.

நினைவில் மூழ்கி
இருக்கும் போது
ஒலியும் நுழைய
மறுக்குதடி.

உன்னைப் பற்றி
எழுதும் போது
கற்பனை தானாய்
முளைக்குதடி.

வேளை கடந்தும்
பல நாள் எனக்கு
பசியும் மறந்து
போகுதடி.

தென்றல் தீண்டும்
நேரத்தில் கூட
தீயாய் உடலும்
வேகுதடி.

தங்கமே நீயென்
அருகில் இருந்தால்
அனலும் புனலாய்
மாறுதடி.

ஆசைதீர உனை
கொஞ்சி குலாவ
அருகினில் சற்றே
வருவாயடி.

அத்தை மகளே
மாமன் துயிலவே
மடியினை கொஞ்சம்
தருவாயடி.

மூன்று முடிச்சு
போடவும் எனக்கு
வாய்ப்பினையும் நீ
அளிப்பாயடி.

வானம் வெளுக்கும்
நேரம் வரைக்கும்
ஒன்றாய்க் கூடி நாம்
மகிழ்வோமடி.

பத்தே மாதங்கள்
சடுதியில் கடந்து
பிள்ளைகள் பெற்று
திளைப்போமடி.

ஆடிப்பாடி
ஆனந்தமாக
வாழ்ந்து நாமும்
ரசிப்போமடி.

திகட்டத் திகட்ட
காதலும் புரிந்து
தம்பதியராக நாம்
இருப்போமடி.

🌷🌷🌷🌹🌹🌹🌺🌺🌺

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...