நடராஜா
நடராஜா எனும் போது
நெஞ்சமெலாம் இனிக்குது
சித்ஸபேசா எனும் போது
சித்த மெல்லாம் குளிருது
மஹேஸ்வரா எனும் போது
மனமும் நிறைவாயிருக்குது
பரமேஸ்வரா எனும் போது
பாவமெல்லாம் கரையுது
திருச்சிற்றம்பலம் எனும் போது
தேகமெல்லாம் சிலிர்க்குது
தில்லை சிதம்பரம் எனும் போது
தரிசிக்க உள்ளம் விழையுது.
திருச்சிற்றம்பலம் !!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.12.2018
No comments:
Post a Comment