நடராஜா
8) பிக்ஷாடனர்
ஆடிய பாதமே
அம்பலத்தரசே
சித்ஸபேஸனே
சிவ சிதம்பரமே
சிவலிங்க ரூபனே
சக்தி உமை பாகனே
தேவாதி தேவன் நீ
தேவார நாதனும் நீ
ஒரு காலுயர்த்தி
நடனமாடும் நின்
அழகை தரிசிக்க
பெரும் பேறாகும்
மயானத்தில் இல்லம்
கொண்ட நாதனே எம்
மனக்கவலையினைத்
தீர்த்திடுவாய் ஈசனே
சிற்றம்பலத்தே
சிந்தையை இருத்திட
சிதம்பரம் க்ஷேத்திரம்
சென்றிட வேண்டும்
அடுத்தடுத்த பிறப்பை
ஐயனே தர வேண்டும்
அனைத்திலும் உனையே
தரிசிக்கும் வரம் வேண்டும்
சித்ஸபேசா சிவ சிதம்பரம்.
திருச்சிற்றம்பலம் !!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இன்று தில்லையிலே
பிக்ஷாடனர் வீதியுலா.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.12.2018
No comments:
Post a Comment