கழிவறை
உனக்கு மிகவும்
பிடித்த இடம் எது
வெனக் கேட்டான்
என் நண்பன்.
சற்றும் யோசிக்காது
சட்டென்று கூறினேன்
கழிவறை தான் எனக்கு
மிகவும் பிடிக்குமென்று.
முகத்தை சுளித்து
மூக்கைப் பொத்தி
அஷ்ட கோணலாய்
முறுவளித்தான்.
வையத்தில் உள்ள
ஒவ்வொரு உயிரும்
வயிற்றை நிரப்பவே
உழைப்பைச் செய்யும்.
கண்ணுக்கு விருந்தாகி
வாய்க்கு ருசி கொடுத்து
வயிற்றுள் சென்ற பின்னே
உணவு பயனளிக்கும்.
வைத்தியரும் கூட
மருத்துவமனையில்
முதலில் வினவுவது
வயிற்றின் சுத்தத்தை.
சிறு குடல் பெருங்குடல்
இரைப்பை கணையமென
கொட்டிக் கிடக்குது நம்
வயிற்றுக்குள்ளே.
ஜீரணிக்க வைக்கும்
ஜீவனைக் காக்கும்
செரிக்காத வயிற்றால்
உயிரே மரிக்கும்.
உண்ட உணவு செரித்து
உயிருக்கு ஊட்டமளித்து
வெளியேறாவிடில் சற்று
யோசனை செய்யுங்கள்..
இத்தனை வேலையையும்
செய்வது வயிறெனில்
துணையாயிருப்பது யாரு
யோசிச்சு கொஞ்சம் பாரு.
இனியும் எவறேனும்
உம்மிடம் கேட்டால்
கழிவறையே கனவு அறை
என தயங்காது கூறுங்கள்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.12.2018
No comments:
Post a Comment