மாற வேணும்
உணர்வுகளை
உறவுகளோடு
பகிர்வதை தவிர்த்து
ஊடகத்தை நாடுவதேன்
குடும்பம் என்றால்
கூடலும் உண்டு
அதனுடன் சேர்த்து
ஊடலும் உண்டு.
சின்னஞ் சிறு
சண்டையும் கூட
சந்தைக்கு வருவது
சங்கடம் தருகிறது.
தகவல் தொடர்பு வசதி
பெருகியதன் மூலம்
இருபத்தி நாலு மணியும்
இணைப்பும் கிடைக்கிறது.
நான்கு சுவற்றுக்குள்
இருவரது பிரச்சினை
வலை தல வசதியால்
நாடறியப் போனது.
சந்தோஷத்தை மெல்ல
சாக்கடையில் தள்ளும்
சமூக கட்டமைப்பிற்கு
ஆபத்தை விளைவிக்கும்.
அரட்டையில் ஆரம்பித்து
ஆவலுடன் சம்பாஷித்து
அசிங்கமாய் நடந்து வரும்
அனைத்தும் விட்டிடுவோம்.
மாறுவோம்
மாற்றுவோம்
மனிதர்களாய்
மலருவோம்.
நினைத்தேன் எழுதுகிறேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.12.2018
No comments:
Post a Comment