Search This Blog

Monday, December 31, 2018

புத்தாண்டு வேண்டுகோள்

புத்தாண்டு வேண்டுகோள்

வழுக்கை விழாத
வாலிபம் வேண்டும்
வழுக்கி விழாத
வயோதிகம் வேண்டும்

வலியில்லாத
வாழ்வு வேண்டும்
வலியைத் தாங்கும்
வல்லமை வேண்டும்

நோயில்லாத
நேரம் வேண்டும்
நோயை எதிர்க்கும்
நம்பிக்கை வேண்டும்

வாக்கு சுத்தமாய்
மொழியுற வேண்டும்
தேக்கு மரமாய் திட
தேகமும் வேண்டும்

நல்லதை நினைக்கும்
குணமும் வேண்டும்
உள்ளதை ஏற்கும்
மனமும் வேண்டும்

உறவுகளோடு
கூடிட வேண்டும்
உற்சாக மிகுதியில்
பாடிட வேண்டும்

கற்ற கல்வி
பயனுற வேண்டும்
காசினியில் வாழ
வழியுற வேண்டும்

இணக்கமாய் நல்
இல்லறம் வேண்டும்
வணக்கமாய் நல்
வாரிசும் வேண்டும்

அச்சம் தவிர்த்த
வாழ்க்கை வேண்டும்
உச்சம் தொடுகின்ற
வெற்றியும் வேண்டும்

ஆளுமை நிறைந்த
நடையும் வேண்டும்
ஆண்டவன் அருள்
அமைந்திட வேண்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
01.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...