Search This Blog

Tuesday, January 1, 2019

சம்போ மஹாதேவா

சம்போ மஹாதேவா

வந்த இடம் விரும்பி
வம்புகள் செய்வதும்
அமுதுண்ட இடம் காண
அடம் பிடித்தலைவதும்
வையத்தில் ஆடவரின்
விருப்பமாயிருக்கும்.

விடலைப் பருவத்து
விளையாட்டு யாவும்
வனிதையின் பின்னே
விரட்டிச் சென்றாலும்
வயோதிகம் வாரின்
ஓய்ந்து போய்விடும்.

விடமுண்ட கண்டனின்
திருவடிகளைப் பற்றி
வீணான எண்ணத்தை
தூரவே அகற்றி நமது
மனதை ஈசனிடம் ஒரு
நிலைப் படுத்துவோம்.

சம்போ மஹாதேவா 🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.01.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...