சம்போ மஹாதேவா
வந்த இடம் விரும்பி
வம்புகள் செய்வதும்
அமுதுண்ட இடம் காண
அடம் பிடித்தலைவதும்
வையத்தில் ஆடவரின்
விருப்பமாயிருக்கும்.
விடலைப் பருவத்து
விளையாட்டு யாவும்
வனிதையின் பின்னே
விரட்டிச் சென்றாலும்
வயோதிகம் வாரின்
ஓய்ந்து போய்விடும்.
விடமுண்ட கண்டனின்
திருவடிகளைப் பற்றி
வீணான எண்ணத்தை
தூரவே அகற்றி நமது
மனதை ஈசனிடம் ஒரு
நிலைப் படுத்துவோம்.
சம்போ மஹாதேவா 🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.01.2018
No comments:
Post a Comment