திருமாலே
வையத்தை
வாழ்விக்கும்
வைகுந்த வாசா
வானரத்தின்
துணை ஏற்ற
வைதேகி நேசா
தரணியை
உய்விக்க
தசாவதாரம்
எடுத்தாய்
அனைத்திலும்
அற்புதங்கள்
பலவாராய்
செய்தாய்
இராமனாக
கண்ணனாக
மனிதனாய்
வாழ்ந்தாய்
பாரதத்தின்
வரலாற்றில்
காவியமாய்
கலந்தாய்
தெய்வம் மனுஷ்ய
ரூபேன என்னும்
தத்துவம் உரைத்து
சென்றாய்
பார்த்தனுக்கருளிய
பகவத் கீதை இந்த
பாருக்கு நீ அளித்த
பொக்கிஷமாகும்
பிறப்பில்லாத
பெருமாளே(னே)
தசாவதாரம் எடுத்த
திருமாலே
கல்கி அவதாரம்
எடுப்பது எப்போது
கயவர்களிடமிருந்து
காப்பது எப்போது ?
ஓம் நமோ நாராயணா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்"
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.12.2018
No comments:
Post a Comment